BIG NEWS!! கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!! மிஸ் பண்ணீடாதீங்க!!
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கான உதவித் தொகையை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2022-23 கல்வியாண்டில் தற்போது 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் இந்த உதவித்தொகை பெற்றுக் கொள்ள நவம்பர் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிதொகையைப் பெற மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!