பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் திடீர் கைது!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
ராஜா

நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதால் பல்வேறு போராட்டங்கள் எழுந்தன. கொதித்தெழுந்த சிலர் பலரின் தலைகளையும் காவுவாங்கிய சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. நுபர்ஷர்மாவின் தலைக்கு பல கோடிகளும் பரிசாக நிர்ணயிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியது. அதன் அதிர்வலைகளை ஓய்வதற்குள் மீண்டும் ஒரு அவதூறு வீடியோ வெளியாகி பெரும் கண்டனத்தை பெற்றுள்ளது.

ராஜா சிங்

தெலுங்கானா கோஷாமல் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜா சிங். இவர் முனவர் பரூக்கி மற்றும் அவரது தாயாரை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ 10 நிமிடங்கள் 27 வினாடிகள் ஓடக்கூடியதாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வீடியோவில், பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நுபுர் ஷர்மாவை பானியில் நபிகள் நாயகம் குறித்து தெலுங்கானா பா.ஜ.க. எம்.எல்.ஏ.ராஜா சிங் அவதூறாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோ முடிவடையும் போது நான் பேசிய அனைத்தும் வெறும் நகைச்சுவைதான் என்று ராஜாசிங் கூறியிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கான பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கின் இந்த வீடியோ கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. வீடியோவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய ராஜா சிங்கை கைது செய்ய வேண்டும் என்று  இஸ்லாமியர்கள் பலர் ஒன்று திரண்டு நேற்றிரவு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேராக ஐதராபாத் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று முழக்கங்களை எழுப்பி ராஜாசிங்கை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இளம் நடிகர் கைது
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டு இன்று தெலுங்கானா போலீசார் தெலுங்கானா ராஜா சிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கை ஐதராபாத் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web