பார் ஊழியரை தாக்கிய பாஜக நிர்வாகி!! பணம் கேட்டதால் ஆத்திரம்!!
மதுபான பாரில் சைடிஷ் வாங்கியதற்கு பணம் கேட்ட ஊழியரை பாஜக நிர்வாகி ஒருவர் தாக்கிய சம்பவம் திருவள்ளூரில் அரங்கேறியது. திருவள்ளூர் நகர பாஜக இளைஞரணி தலைவர் உதய. கார்த்திகேயன் . இவர் கடந்த 3 ஆம் தேதி திருப்பாச்சூர் மதுபான பாரில் 160 ரூபாய் மதிப்பிலான சைடிஷ் வாங்கி மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் மீண்டும் அந்த மதுபான பாருக்கு வந்த கார்த்திகேயனிடம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் பிரசாத் பணம் கேட்டிருக்கிறார். அதற்கு கார்த்திகேயன் நான் பாஜக நிர்வாகி, என்னிடமே நீ பணம் கேட்கிறாயா என்று கூறி, அந்த பார் ஊழியரை தகாத வார்த்தையில் திட்டி, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. மேலும் பார் ஊழியர் போலிஸாரிடம் இதுகுறித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக நிர்வாகியின் இந்த ஆராஜக செயல் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.