BREAKING!! ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா!! அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!!

 
ராகுல் டிராவிட்

இந்தியாவில் கொரோனா 3 வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் 4 வது அலை ஏற்படாமல் பல்வேறு தடுப்பு முறைகளையும் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இருந்த போதிலும் பிரபலங்கள், தலைவர்கள், மருத்துவர்கள், சாமானியர்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் என கொரோனா பாரபட்சமின்றி பரவி வருகிறது. 

ராகுல் டிராவிட்
அந்த வரிசையில் தற்போது  கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.  இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28ம் தேதி துபாயில் லீக் சுற்றில் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ராகுல் டிராவிட்

ஜிம்பாப்வேவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் ராகுல் டிராவிட் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் டிராவிட் ஓய்வில் இருந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web