BREAKING!! ஈபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது!! பரபரப்பு தீர்ப்பு!!

 
ஈபிஎஸ்

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம்  ஜூலை 11-ம் தேதி  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

முதலில் வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அவர் இந்த வழக்கை விசாரிக்க பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய 2 தினங்கள் விசாரணை நடந்தது.

இதில் இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய நாராயணனும், ஓபிஎஸ் தரப்பில் குரு கிருஷ்ணகுமாரும் ஆஜராகி வாதாடினர். சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தங்கள் தரப்பு நியாயங்களை நீதிபதி முன் வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். 

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஆக. 17) வெளியாகும் என்று நேற்று மாலை தகவல் வெளியானது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்க இருக்கிற நிலையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

அதன்படி 11.30 மணிக்கு மேல் நீதிபதி தனது தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். இந்நிலையில் ஜூலை 11-ம்  தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.  ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும்” என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 

தனிக்கூட்டம் கூட்ட கூடாது, இதற்கென தனி ஆணையரை நியமிக்கவேண்டும் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web