BREAKING!! ஜெயலலிதா இறந்த தேதியே தவறு! ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை!!

 
ஆறுமுகசாமி ஆணையம்


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் உண்மைநிலையை கண்டறிய ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையம்

' அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது  ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைந்துள்ளது.  மேலும் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்பட்டு உள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம்: எடுபடாமல் போன அப்போலோ வாதம்..!
அத்துடன் ஆறுமுகசாமி அறிக்கையில் ஜெயலலிதா இறந்த தேதியே தவறு. 2016 டிசம்பர் 5ம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சாட்சியங்களின் அடிப்படையில் ஜெயலலிதா இறந்தநேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி  பிற்பகல் 3 மணி முதல் 3.50மணிக்குள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web