#BREAKING: புழல் சிறையில் இருந்து 40 கைதிகள் விடுதலை! தமிழக அரசு உத்தரவு!

 
புழல்

புழல் சிறையில் இருக்கும் 40 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய தலைவர்கள் மற்றும் மாநில பழம்பெரும் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது சிறைகளில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது புழல் சிறையில் இருந்து 40 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புழல்

அண்ணாவின் 113&வது பிறந்தநாளை முன்னிட்டும், 75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும் மத்திய, மாநில அரசுகளின் முடிவின் படி புழல் சிறையில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

க்ரைம்

முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் 113&வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்ததிருந்தார். அதேபோன்று 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டும் சிறை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி தமிழக அரசு ஒப்புதலின்படி புழல் சிறையில் இருந்து 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

.

From around the web