#BREAKING: பீகார் முதலமைச்சருக்கு நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

 
நிதிஷ் குமார்

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 2வது 3வது அலை முடிவுக்கு வந்தாலும், தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நிதிஷ்குமார்

நேற்று நாடின் 15வது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமார் பங்கேற்காதது பல சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், தற்போது நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்த செய்தி வந்துள்ளது. 

கடந்த ஜனவரியில் பீகார் மாநிலத்தின் துணை முதல்வர்கள் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி உட்பட பல அமைச்சர்களுக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நிதிஷ்குமார்

மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு, நிதிஷ்குமார், தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web