#BREAKING: 15ம் தேதி செயற்குழு, பொதுக்குழு கூட்டம்! டி.டி.வி. தினகரன் அறிவிப்பு!

 
டிடிவி தினகரன்

அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் டிடிவி தினகரன். அதிமுக சில்லு சில்லாய் சிதறி போகும் நிலையில் இருக்கிறது. ஆனால், சசிகலா தான் அதிமுகவை சிதற விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதிமுக தொண்டர்களை அப்படியே சிந்தாமல், சிதறாமல் கொண்டு செல்லும் எண்ணம் சசிகலாவுக்கு. எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம் என காத்திருக்கிறார் டிடிவி. ஆனால், அப்படி காத்துக் கொண்டு சும்மா இருக்க கூடாது என்று அமமுக தொண்டர்களையும் உற்சாகமாகவே வைத்திருக்கிறார். அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 15ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சசிகலாவுக்கு அனுமதியில்லை! மகள் திருமணத்தை தள்ளி வைத்தார் டிடிவி தினகரன்!

இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது, ‘‘துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் அ.ம.மு.க. வின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் வருகிற 15ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெறும். சென்னை வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு கட்சியின் செயற்குழு மற்று பொதுக்குழு உறுப்பினர்கள் கண்டிப்பாக வருகை புரிய வேண்டும். மேலும் அவர்கள் அழைப்பிதழுடன் வர வேண்டும் என்று’’ கூறப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன்
கடந்த மாதம் 30ம் தேதி மதுரையில் நடைபெற்ற அமமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், "ஆகஸ்ட் 15ம் தேதியன்று அமமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜெயலலிதா பொதுக்குழு கூட்டம் நடத்தும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும். இதற்கான அறிவிப்பை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கொடுப்பேன். " எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து நடைபெற உள்ள கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web