#BREAKING: டெல்லியில் ராகுல் காந்தி திடீர் கைது!

 
ராகுல்காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது கட்சித் தொண்டர்களுடன் குடியரசு தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டார். இதனால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்ட் மோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி எம்.பி. மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கு முன்னர் கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை நடைபெற்றது.  சுமார் 2 மணிநேரம் நடந்த இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.

ராகுல்காந்தி

இதனை தொடர்ந்து, தற்போது மீண்டும் இன்று அமலாக்க துறையின் விசாரணைக்கு சோனியா காந்தி தற்போது ஆஜராகியுள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராவதால் காங்கிரஸ்  கட்சி தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை சோனியா காந்தியிடம் விசாரணை நடத்துவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி தனது தொண்டர்களுடன் பேரணியாக செல்ல முயற்சித்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

ராகுல்காந்தி

இதனால் ராகுல்காந்தி திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் குடியுரசு தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்வோம் என உறுதியாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தை நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web