பகீர்!! 11 வயது பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!! விளையாட்டு விபரீதமானது!!

 
மாணவன் தற்கொலை

சென்னை மாதவரம் அடுத்த புழல்  புத்தகரம் காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளையமகன் கார்த்திக் (11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இந்நிலையில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்ற நேரத்தில் மாலை சிறுவர்கள்  வீட்டில்  விளையாடிகொண்டிருந்தனர்.  அப்போது அண்ணன், தம்பி இருவரும்  தூக்கு போடுவது எப்படி  என்பதை  செய்து பார்த்துள்ளனர். அதில் படுக்கை  அறையில் உள்ள  மின்விசிறியில்  சேலையை  கழுத்தில்  போட்டுகொண்டு  நடித்து  பார்த்துள்ளனர்.

 

அதில் எதிர்பாராதவிதமாக இளையமகன் கார்த்திக் தூக்கு போட்டுகொண்டுள்ளார். இதனை கண்ட அவனது அண்ணன்  உடனடியாக அவர்களது  வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தவர்களை உதவிக்கு அழைத்து தம்பியை மீட்டுள்ளார்.

இருப்பினும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின்பு தகவலின் பேரில் விரைந்து வந்த புழல் காவல்துறையினர்  சுறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்நிலையில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய பெற்றோர் மகன் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து கதறி துடித்தனர்.  இந்நிலையில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து மேலும் புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு என எண்ணி விபரிதத்தில் செய்த செயலால் ஒரு உயிர் பரிபோனது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web