பகீர்!! 16 வயது சிறுமி மீது துப்பாக்கி சூடு!! பேசாததால் இளைஞர் வெறிச்செயல்!!

 
துப்பாக்கி

தெற்கு டெல்லியின் சங்கம் விஹார் பகுதியில் உள்ள பள்ளியில் 16 வயது மாணவி 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவிக்கும் அர்மான் அலி என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு ஆண்டுகளாக பழகி வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவி அர்மான் அலியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளது.

ஆன்லைன்

இதனால் கோபம் அடைந்த அர்மான அலி, நேற்று முன்தினம் மாணவி பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த மாணவியிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அர்மான் அலி என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் இரண்டு வருடங்களாக மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் மாணவி பேசுவை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த அர்மான் அலி தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுள்ளான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ்

இது தொடர்பாக வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய அர்மான் அலியை தேடி வந்த நிலையில் இன்று கைது செய்தனர். மேலும் இதற்கு உதவியாக இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். தன்னுடன் பேச மறுத்த பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web