பகீர்!! குதிரை எட்டி உதைத்ததில் 4வயது சிறுவன் பலி!!

 
சிறுவன்

பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் 30-வது தெருவை சேர்ந்தவர் டில்லிராஜ் (வயது-39). இவர் கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் கவுதம் கிருஷ்ணா (வயது 4) யுகேஜி படித்து வருகிறார்.நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் கவுதம் கிருஷ்ணா, வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது குதிரை ஒன்று மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிறுவன் கவுதம் கிருஷ்ணாவை அந்த குதிரை மார்பில் எட்டி உதைத்தது. இதனால் சிறுவன் வலியால் துடிதுடித்து அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.

குதிரை

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் சிறுவனை மீட்ட பெற்றோர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு கவுதம் கிருஷ்ணாவை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிறுவன் பலி

இதை கேட்ட சிறுவனின் பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து சங்கர் நகர் காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  விரைந்து சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.குதிரை எட்டி உதைத்ததில் யுகேஜி படித்து வந்த 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web