பகீர்!! 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டுக்காரன்..!

பக்கத்து  வீட்டுக்காரரால்  12 வயது  சிறுமி  பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளான  சம்பவம்  உத்தரபிரதேச  மாநிலத்தில்  பெரும்  அச்சத்தை   ஏற்படுத்தி உள்ளது.

 
பாலியல் வன்கொடுமை

உத்தரபிரதேச மாநிலம் பிலிப்ஹட் மாவட்டம் புரன்பூர் பகுதியில் 12 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் சுக்லால் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  சிறுமியின் பெற்றோர்  வெளியே சென்றுவிட்டதால்  வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.  இதனை நோட்டமிட்ட சுக்லால் உடனடியாக யாரும் பார்க்காத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் பயந்துபோன சிறுமி பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் தனக்கு நடந்த கொடூரம் குறித்து கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக இது குறித்து போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுக்லாலை தேடினார். ஆனால் தண்டனைக்கு பயந்து அவர் தலைமறைவானது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சுக்லால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும் ஆங்காங்கே  இந்த அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. எனவே பாலியல் சீண்டல்கள், தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அமர்ந்து பேச வேண்டும். மேலும் எதையும் மறைக்காமல், பயப்படாமல் பெற்றோர்களிடம் கலந்துரையாடும் சுதந்திரத்தை தந்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

From around the web