பகீர்!! போலீஸ் ஸ்டேசனிலேயே காவல்துறை ஆய்வாளர் தற்கொலை முயற்சி!!
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சாந்தகுமாரி. இவர் 4 மாதத்திற்கு முன் மதுரையில் பணிபுரிந்து வந்தார். அங்கிருந்து பணி மாறுதல் ஆகி ஆலங்குளம் காவல்நிலையத்தில் பணிக்கு சேர்ந்தார். ஏற்கனவே அவருக்கு விபத்து காரணமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் ஆலங்குளத்தில் பணிக்கு சேர்ந்த உடன் சில நாட்களிலேயே மருத்துவ விடுப்பு எடுத்து சென்றுவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்கு வந்துள்ளார்.
பெண்கள் குழந்தைகள் சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருந்ததால் அது குறித்த பணிகளும், மனஉளைச்சலும் இருந்தது வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இரவு ரோந்து பணிக்காக காவல் நிலையம் வந்த ஆய்வாளர் கழிப்பறைக்கு சென்று அங்கு விஷம் அருந்தியுள்ளார். அதன்பின் மற்ற காவலர்களிடம் வாய் குளறியபடி பேசினார். பேசிக்கொண்டிருந்த போதே காவல்நிலையத்திலேயே வாந்தி எடுத்து அங்கேயே மயங்கினார். விஷயமறிந்த மற்ற காவலர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காவல் நிலையத்திலேயே ஆய்வாளர் விஷமறிந்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்த காரணங்களா, பணியில் மன அழுத்தமா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!