பகீர்!! போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்!! 8 போலீஸ்காரர்கள் பலி!!

 
வெடிகுண்டு

கொலம்பியாவில் அண்டை நாடான வெனிசுலாவின் ஆதரவுடன் தேசிய விடுதலை ராணுவம் மற்றும் கொலம்பியா புரட்சிகர ராணுவம் ஆகிய இரு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பை கொலம்பியா பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. இதனால், போதைப்பொருள் கடத்தல் கும்பல், பயங்கரவாத கும்பல்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

போலீஸ்

இந்த நிலையில், கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹுய்லாவின் சான் லூயிஸ் நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது போலீசார் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த 8 போலீஸ் அதிகாரிகளும் உயிரிழந்தனர். 

போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டின் அமைதிக்கு எதிரான நாசவேலை என்று அந்நாட்டு அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். 

இந்த தாக்குதல் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கி மூலம் நடத்தப்பட்டது போல் தெரிவதாக பிராந்திய போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கொலம்பியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்பான தேசிய விடுதலை ராணுவம் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

வெடிகுண்டு

கொலம்பியாவின் அரசாங்கம், இடதுசாரி கிளர்ச்சியாளர்கள், வலதுசாரி துணைப்படைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே 1985 மற்றும் 2018 க்கு இடையில் மட்டும் குறைந்தது 4,50,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web