பகீர்!! கிச்சனில் கஞ்சாச்செடி!! அதிரடி சோதனையில் திடுக்கிடும் பிண்ணனி!!

 
கஞ்சாச் செடி

கேரள மாநிலம் திருக்காக்கரையில் அமைந்துள்ளது அஜந்தா அடுக்குமாடி குடியிருப்பு.  இந்த குடியிருப்பில் ரகசியமாக கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பி 3 என்ற குடியிருப்பில், அபர்ணா ரெஜி என்ற பெண் வசித்து வருகிறார். இவருடன் ஆலன் ராஜூ என்ற உறவினரும் வசித்து வந்தார். இவர்களது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

போலீஸ்

அப்போது போலீசார் எல்லா அறைகளையும் சோதனை செய்த பின்னர் சமையல் அறையில் சென்று பார்த்த கஞ்சா செடி சுமார் ஒன்றரை அடி உயரத்தில் தொட்டியில் வைத்து பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுவது கண்டுபிடித்தனர். போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்து அதனை வளர்த்து வந்த அபர்ணா ரெஜி மற்றும், ஆலன் ராஜூ ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

சிறை

விசாரணையில் இருவரும் என்ஜினீயர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் கடந்த 8 மாதங்களாக அக்குடியிருப்பில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. சமையல் அறையில் கஞ்சா செடிக்காகவே பிரத்யேகமாக எல்.ஈ.டி விளக்குகளும், எக்ஸாஸ்ட் பேனும் வைத்திருந்தது போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது.என்ஜினீயர்கள் 2 பேர் கிச்சனுக்குள் வைத்து கஞ்சா செடியை ரகசியமாக வளர்த்த சம்பவம் கேரளா மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web