பகீர்!! கல்லூரி மாணவி கருக்கலைப்பு செய்த போது உயிரிழப்பு!! காதலன் தப்பி ஓட்டம்!!

 
மாணவி

தெலுங்கானா மாநிலத்தில் பத்ராத்ரி கொத்தகுடோம் மாவட்டத்தில் பூசுகுடேன் பகுதியில் வசித்து வருபவர்  புக்யா நந்து. இவருக்கும் வி.கே ராமாவரம் கிராமத்தில் வசித்து வரும் மாணவிக்கும் காதல் அரும்பியது. அந்த மாணவி முதலில் நந்துவின் காதலை ஏற்கவில்லை. ஆனால் அவரை விடாப்படியாக துரத்தி துரத்தி காதலித்து வந்ததால் அந்த பெண் காதலை ஏற்று இருக்கிறார். சில நாட்களிலேயே அந்த மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து இருக்கிறார். பலமுறை உல்லாசம் அனுபவித்ததில் மாணவி கர்ப்பமடைந்திருக்கிறார்.

கருக்கலைப்பு


திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமடைந்ததால் வீட்டிலும் ஊரிலும் கல்லூரியிலும் அவமானமாக போய்விடும் என இருவரும் கலந்து ஆலோசித்தனர். இதனால் யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.தனியார் மருத்துவமனைக்கு காதலியை அழைத்து சென்று அங்கு  மனைவி என்று பொய் சொல்லி மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார். மருத்துவர்களும் கணவன்- மனைவி என நம்பி அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யத் தொடங்கினர். மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

கருக்கலைப்பு
இதை தெரிந்து கொண்ட காதலன் அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடிவிட்டார். சிகிச்சையில் ரத்தப்போக்கு அதிகமாகி துடி துடித்து அந்த மாணவி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அந்தப் பெண்ணை அழைத்து வந்த இளைஞரை மருத்துவர்கள் தேடும் போது தான் அவர் மாயமானது தெரியவந்தது.உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த காவல்துறையினர்  மாணவியின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். கல்லூரிக்கு சென்ற மகள் கருக்கலைப்பு செய்து உயிரிழந்த தகவலை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தப்பி ஓடிய காதலனை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web