பகீர்!! குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக்கொலை!!

 
போலீஸ்

சமீபகாலமாக குடிபோதையில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு விதமான நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. இருந்த போதிலும் போதை ஆசாமிகளின் அட்ராசிட்டிகள் தொடர்ந்து வருகின்றன. அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் இன்னும் அதிகம்.

போலீஸ்

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் வசித்து வந்தவர் கார்த்திக். இவர் தனது நண்பர்களான மதன் உள்ளிட்ட 5 பேருடன் பீவி காலனியில் உள்ள சுடுகாட்டில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. அப்போது நண்பர்கள் 5 பேருக்கும் கார்த்திக்குக்கும் இடையில் ஏதோ வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மதன் ஆத்திரமடைந்து தனது மற்ற நண்பர்களான 4 பேருடன் இணைந்து கார்த்திக்கை வெட்டி படுகொலை செய்துவிட்டார். பின்னர் அங்கிருந்து மதன் உள்ளிட்ட 5 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர் என்று கூறப்படுகிறது.

போதை குடி சாராயம் குற்றம் க்ரைம்
இது குறித்து தகவல் அறிந்த செம்பியம் போலீசார் சுடுகாட்டிற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திக்கை படுகொலை செய்த நண்பர்களை வலை வீசி தேடி வருகின்றனர். மது போதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு படுகொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web