பகீர்!! தூக்க மாத்திரை தராததால் மருந்து கடை உரிமையாளர் அடித்து துவம்சம்!!

 
திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் தனியார் மருந்துகடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடவேர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் மருந்துச் சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை கேட்டு தினமும் தொந்தரவு செய்துள்ளதாக தெரிகிறது.  

திருவாரூர்

இந்நிலையில் நேற்று இரவு கடைக்கு வந்த செந்தில் மற்றும் அவரது அண்ணன் மகன் இமயவர்மன் ஆகியோர் தூக்க மாத்திரை கேட்டுள்ளனர். ஆனால் அந்த மருந்துக் கடை உரிமையாளர், மருத்துவர் பரிந்துரைத்த மருந்து சீட்டு இல்லாமல் தரமாட்டோம் என கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த செந்தில் மற்றும் அவரது அண்ணன் மகன் இமயவர்மன் ஆகியோர் மருந்துக்கடை உரிமையாளர் ரவி குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 திருவாரூர்
மேலும் இந்த சம்பவம் குறித்து குடவாசல் காவல் நிலையத்தில் மருந்துக்கடை உரிமையாளர் ரவிக்குமார் புகார் கொடுத்துள்ளார். அதேபோல் செந்தில், அவரது அண்ணன் மகன் இமயவர்மன் ஆகியோரும், மருந்துக்கடை உரிமையாளர் ரவிக்குமார் ஒருமையில் திட்டியதாக புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web