பகீர் !! போதையில் இளம் பெண்கள் அலப்பறைகள்!! சீரழியும் இளைய சமுதாயம்!!

 
இளம்பெண்கள் அட்டகாசம்

சென்னையில் மதுபான விடுதிகளில் ஆட்டம் போட்டு விட்டு நள்ளிரவில் வீடுதிரும்பும் இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களின் அட்டகாசங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது அதே போல் நேற்று ஜூலை 30 ம் தேதி அண்ணா நகர் ரவுண்டானாவுக்கு அருகில் பைக்கில் 2 இளம்பெண்கள் மற்றும் 2  ஆண்கள் வந்து கொண்டிருந்தனர். திடீரென இவர்களுக்குள் கோஷ்டி சண்டை ஏற்பட்டது. நள்ளிரவில் சாலையில்  துப்புரவு பணி செய்து கொண்டிருந்த பணிப்பெண் இவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

இளம்பெண்கள் மதுபோதையில் இருந்ததால்  துப்புரவுப்பணி பெண்ணை தாக்கி அவரது செல்போனை பறித்து தூக்கி எரிந்தனர்.  இதை தடுக்க வந்த மற்றொரு துப்புரவு பணியாளரின் சட்டையையும் கிழித்து தாக்கத் தொடங்கினர். அந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் அண்ணா நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனே அந்த இளம்பெண்கள் ப்ளேட்டை திருப்பி போட்டு தங்களது செயினை துப்புரவு பணியாளர்கள் பறித்தாக குற்றம் சாட்டினர்.  காவலர்கள் இளம்பெண்களை அங்கிருந்து அழைத்து சென்று எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். 


இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதே நேரத்தில் இளம்பெண்கள் தன்னை தாக்கி செல்போன் பறித்து சென்றதாக துப்புரவு பணியாளர் ரங்கீலம்மாள்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிக்கவும், பணிபுரியவும் வீட்டை விட்டு வெளியில் செல்லும் இளம் பெண்கள் சீரழிந்து வருகின்றனர். இதனால் கலாச்சாரம், சமுதாயம் சீர்கேடு அடைவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web