பகீர்!! நண்பர்களுக்குள் கத்திக்குத்து!! ஒருவர் பலி!! இளம்பெண் குறித்த சர்ச்சையில் விபரீதம்!!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான பிரின்ஸ் (20) மற்றும் மிகிர் (21) டெல்லியின் மல்காகஞ்ச் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தனது நண்பர் சித்தார்த் என்பவருடன் ஓரிடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இளம் பெண் ஒருவரை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மோதல் முற்றியதால் நண்பர் சித்தார்த் ஆத்திரமடைந்தார்.
தான் வைத்திருந்த கத்தியை எடுத்த சித்தார்த், சகோதரர்களான பிரின்ஸ் மற்றும் மிகிர் ஆகிய 2 பேரையும் சரமாரியாக பலமுறை குத்தினார். இதில் பிரின்ஸ் மற்றும் மிகிர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சித்தார்த் அங்கிருந்து தப்பியோடினார். ரோட்டில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரின்ஸ் மற்றும் அவரது சகோதரர் மிகிரையும் அந்த வழியாக சென்ற நித்தேஷ் என்பவர் அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதில், பிரின்ஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் அவரது சகோதரர் மிகிர் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.இளம் பெண் பற்றிய பேச்சில் திடீரென்று வாக்குவாதம் முற்றி நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்ட சம்பவம் கொலையில் முடிந்த கொடூரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!