பகீர்!! சங்கம் வைத்து, அழைப்பிதழ் அடித்து ஹோட்டலில் விவாகரத்தை கொண்டாடும் ஆண்கள்!! சீரழியும் கலாச்சாரம்!!

 

 

மத்திய பிரதேச மாநிலத்தில் ‘சகோதரர்கள் நலச்சங்கம்’ என்ற தன்னார்வ அமைப்பு கடந்த 2014-ம் ஆண்டு முதல் இருந்து இயங்கி வருகிறது. இந்த அமைப்பு வரதட்சணை கொடுமை, விவாகரத்து ஆகிய வழக்குகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்காக குரல் கொடுத்து வருகிறது. மேலும் இலவச சட்ட ஆலோசனையும் மற்றும் உதவியும் அளித்து வருகிறது. 

இந்த நிலையில், நீண்டகால சட்ட போராட்டத்துக்கு பிறகும், ஏராளமான பணத்தை ஜீவனாம்சமாக அளித்தும் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற 18 ஆண்களை அழைத்து ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. 

வருகிற 18-ம் தேதி, மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே ஒரு சொகுசு விடுதியில் இந்த கொண்டாட்டம் நடக்கிறது. இதற்காக வடிவமைக்கப்பட்ட அழைப்பிதழ், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல தரப்பு மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் பெற்று வருகிறது. 

இத்தகைய கொண்டாட்டம், இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என்று பலர் அந்த சங்கத்தின் அமைப்பாளர் ஜாகி அகமதுவிடம் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து ஜாகி அகமது கூறுகையில், மோசமான திருமணங்களில் சிக்கிய ஆண்கள், தற்கொலை முடிவை எடுக்காமல் விவாகரத்து பெறுவதே தங்களது விருப்பம் என்று கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web