பகீர்!! காணாமல் போன 10 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!!

 
நகுல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மாரனூரில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு 10 வயதில் நகுல் என்ற மகன் இருந்தார். கணவன், மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். எனவே  கணவனை பிரிந்த சரண்யா பூசாரிபாளையத்தில் தனியாக மகனுடன் வசித்து வந்தார். சிறுவன் நகுல் செண்பகபுதூர் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

கிணற்றில் பாய்ந்த கார்
இந்நிலையில் சிறுவன் நகுல் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரண்யா, தனது உறவினர்கள் துணையுடன் நகுலை பல இடங்களில் தேடினார்.

இருந்தும் பலனில்லை. எனவே உடனடியாக சத்தியமங்கலம் போலீசில்  புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுவன் நகுலை தீவிரமாக தேடி வந்தனர்.சிறுவன் நகுலுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதனால் சரண்யா மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளது.

காதலியுடன் பேசிக்கொண்டே கிணற்றில் குதித்த காதலன்!!

இந்தவழக்கு குறித்து போலீசார் கூறும்போது, ‘‘சிறுவன் நகுல் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.

இருப்பினும் சிறுவன் யாருடன் விளையாடிக் கொண்டிருந்தான். என்ன நடந்தது என்பது குறித்து அங்குள்ள பொது மக்களிடமும், சிறுவர்களிடமும் தகவல்களை சேகரித்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 10 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web