பகீர்!! இளம் பெண்களை குறிவைத்து ஊசித் தாக்குதல்!!

 
ஊசி

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளைத் தொடர்ந்து, ஸ்பெயினிலும் இந்த பிரச்சினை தலைதூக்கி போலீசுக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது.பிரான்ஸ் நாட்டில் பொது மக்கள் அதிகளவில் கூடும் கிளப் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது ஊசி போட்டுவிடுகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊசி

ஸ்பெனியில் உள்ள ஜிஜோன் என்ற வடக்கு நகரத்தில் 13 வயது சிறுமியின் மீது போதை ஊசி போட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தன் மீது ஏதோ ஒரு கூர்மையான ஊசி போடப்பட்டதை உணர்ந்த சிறுமி உடனடியாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையில் சேர்த்தனர்.


தாக்குதலுக்கு ஆளான பெண்கள் மற்றும் சிறுமகளின் உடம்பில் இருந்து எந்த நச்சுப் பொருளும், போதைப் பொருளும் கிடைக்கப் பெறவில்லை. மேலும் போலீஸ் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊசி சாக்லெட்

இந்த மோசமான தாக்குதல் குறித்து கடந்த 2 வாரங்களில், காடலோனியாவில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஸ்க் நாட்டில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பொது மக்கள் கூடும் இடங்கள் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web