பகீர்!! பெட்ரோல் பங்க்கில் கொள்ளை!! வெளியான சிசிடிவி காட்சிகள்!!

 
கொள்ளை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு -கூமாப்பட்டி சாலையில் சத்யா மோகன் இன்டியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் மோகன். இதில் 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கொள்ளை

இந்நிலையில் 4 ஊழியர்கள் நேற்று முன் தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் நேற்று காலை பெட்ரோல் பங்கில் பணம், செல்போன் திருடுபோனதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்ள அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது அதிர்ந்து போனார்கள்.

நேற்று அதிகாலை நேரத்தில் பெட்ரோல் பங்கிற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்குள்ள அறைக்குள் செல்கின்றனர். அப்போது 2 ஊழியர்கள் அங்கு நன்றாக தூங்கி கொண்டிருந்தனர். உள்ளே பதுங்கி சென்ற கொள்ளையர்கள் ஊழியர் ஒருவரின் விற்பனை செய்த பணப்பையையும் மற்றொருவர் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அருகே இருந்த செல்போனையும் எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

போலீஸ்

திருடுபோன பையில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருந்ததாகவும், மேலும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றதாகவும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் சுரேஷ் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெட்ரோல் பங்க் கண்காணிப்பு கேமராவை அடிப்படையாக வைத்து போலீசார் கொள்ளையர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் பெட்ரோல் பங்கிற்குள் கொள்ளையர்கள் புகுந்து திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web