பகீர்!! பள்ளியின் தாளாளர் 4 வயது மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை!!

 
காமராஜ்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பாடி கிராமத்தில் வசித்து வருபவர்  காமராஜ். இவர் உலகம் பட்டு அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து  வருகிறார். இவரது மனைவி தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார்‌. காமராஜ் அந்த பள்ளியின் தாளாளராக இருந்து வருகிறார். நிர்வாகத்தை கவனிக்கும் சாக்கில் அடிக்கடி  மனைவி நடத்தும் பள்ளிக்கு  வந்துள்ளார். அந்தப் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை போளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மகளை பாலியல் தொல்லை..!! தந்தைக்கு தீர்ப்பு கூறிய நீதிமன்றம்..!!

அவரது  உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால்  வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட சைல்டுலைன் பிரிவுக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இது குறித்து சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சாக்லேட் கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக  திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதில் பள்ளிக்கு சென்ற சிறுமையை சாக்லேட் கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் நடிகர் கைது

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிறுமியிடம் அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்ட போது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது பள்ளி தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ் என்பதை தெரிவித்துள்ளார். இதனையடுத்து பள்ளி முன்பு பொதுமக்கள் திரண்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. திருச்செந்தூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த காமராஜை திருவண்ணாமலை மாவட்ட போலீசார் அறிவுறுத்தலின் பேரில் எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர். அவரை போளூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் எதுவும் நிகழா வண்ணம்  தனியார் பள்ளி முன்பு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web