பகீர்!! தாமிரபரணி அணைக்கட்டில் தாயுடன் குளிக்க சென்ற இரண்டு பெண் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலி !!

 
குழந்தைகள் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை  சேர்ந்தவர் கண்ணன். இவர் நெல்லையில்   உள்ள பிரபல ஜவுளிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள்.இவர் நெல்லை டவுண் தனியார் கடையில் பணி செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கண்ணனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு  மாதுரி தேவி  என்ற நான்கரை வயது பெண் குழந்தையும், நிரஞ்சனா என்ற ஏழு மாத பெண் குழந்தையும் உள்ளது. கடந்த சில நாட்களாக நெல்லை டவுனில் உள்ள தாய் வீட்டில் மாரியம்மாள் இருந்து உள்ளார்.நேற்று இரவு தான் சுத்தமல்லி பெரியார் நகரில் உள்ள கணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மூத்த மகள்  ஆற்றிற்கு குளிக்க செல்ல வேண்டும் என கூறியதால் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு ஆட்டோவில்  சென்றதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.குளித்துவிட்டு அணைக்கட்டு கரை பகுதியில்  வெளியே நடந்து வந்த போது மூத்த பெண் குழந்தை தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டதாகவும் அதனை காப்பாற்ற கை குழந்தையுடன் ஆற்றில் குதித்து மூத்த குழந்தையை தேடிய நிலையில் கைக்குழந்தையும் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.  பாசனத்திற்காக அணைக்கட்டில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால்  தண்ணீரில் மாரியம்மாளும் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

 இந்நிலையில்    ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்த மாரியம்மாளை மீட்டதுடன் உயிரிழந்த நிலையில் 7 மாத பெண் குழந்தையையும் மீட்டுள்ளனர். இது குறித்த தகவல் காவல்துறைக்கும் தீயணைப்பு மீட்பு படையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. பின்னர்  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் மாரியம்மாளை  மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீரில் விழுந்து இறந்த  7 மாத  குழந்தையின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் விழுந்த மூத்த பெண்குழந்தையை மீட்ட தீயணைப்புத்துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக  நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இரண்டு பெண் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட தாய் மாரியம்மாள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்து வருவதால்  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web