பகீர்! 3 வயது குழந்தை மீது ஏறி இறங்கிய வேன்! வீட்டின் வாசலிலேயே பலியான சோகம்!

 
குழந்தை

விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை மீது வேன் டயர் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது. மதுரை மாவட்டம் பரவை பகுதிக்கு அருகில் சத்தியமூர்த்தி நகரில் வசித்து வருபவர் செந்தில் குமார். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினருக்கு பொன்ராம் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது. தந்தை செந்தில்குமார் வேலைக்கு சென்ற நிலையில் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது.

க்ரைம்

அப்பொழுது வேலை ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்ல, தனியார் மில்லுக்கு சொந்தமான வேன் ஒன்று அவ்வழியாக வந்தது. குழந்தை விளையாடிக் கொண்டிருப்பது கவணிக்காமல் வேன் ஓட்டுநர் குழந்தையின் மீது வண்டியை மோதியுள்ளார். 

குழந்தை

அக்கம் பக்கத்தினரின் அலறல் சத்தம் கேட்டு வேன் ஓட்டுநர் வண்டியை நிறுத்தி பார்த்த போது குழந்தையின் தலைப்பகுதியில் வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கி குழந்தை பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து. இதையடுத்து விபத்தில் இறந்த குழந்தையை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேனை கவனக் குறைவாக ஓட்டிச் சென்ற சேக் அப்துல்லா என்ற ஓட்டுநரை சமயநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web