பகீர்! சிறுமியின் தலையை துண்டித்து பூஜை! சிதறிக் கிடந்த எலுமிச்சைப் பழம், மஞ்சள் தூள்!

 
கிருத்திகா

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலைத் தோண்டி எடுத்து, தலையை மட்டும் துண்டாக்கி மர்ம கும்பல் ஒன்று எடுத்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி புதைக்கப்பட்ட இடத்தின் அருகே எலுமிச்சைப்பழம், மஞ்சள் தூள் போன்றவை சிதறி கிடந்துள்ளதால், நரபலி, பூஜை போன்றவைகள் நடைப்பெற்றனவா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள சித்திரவாடி பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா (12). இவர், அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 5ம் தேதி வீட்டின் எதிரே விளையாடி கொண்டிருந்தார். அப்போது தெரு விளக்கு மாற்றுவதற்காக மின் ஊழியர் கலைச்செல்வன் (20) மின் கம்பத்தின் மீது ஏறினார். 

மின் கம்பத்தின் மீது கலைச்செல்வன் ஏறிய போது, ஏற்கெனவே சேதம் அடைந்திருந்த மின்கம்பம், கலைச்செல்வனின் பாரத்தை தாங்காமல் முறிந்து, அங்கு விளையாடி கொண்டிருந்த கிருத்திகா மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி கிருத்திகா சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் சித்திரவாடி மயானத்தில் புதைக்கப்பட்டது.

சுடுகாடு

இந்நிலையில் நேற்று காலை அவ்வழியாக சென்ற கிராம மக்கள், மயானத்தில் கிருத்திகாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சை பழம், மஞ்சள்தூள், குங்குமம், தலைமுடிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிருத்திகாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். 

இதையடுத்து அவர்கள் இது குறித்து சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். அப்போது கிருத்திகாவின் தலை துண்டித்து எடுத்து செல்லப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டு

உடலை கைப்பற்றிய போலீசார் மறு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் என்பதாலும், கிருத்திகா அவரது வீட்டுக்கு மூத்த மகள் என்பதாலும் மாந்திரீகத்துக்காக மர்மநபர்கள் அவரது தலையை துண்டித்து எடுத்து சென்றார்களா? தலையை துண்டித்து எடுத்து சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web