பகீர்! அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி வெட்டி படுகொலை! தலையைத் துண்டித்து பயங்கரம்!

-தீபா
 
ரவுடி

பட்டப்பகலில் சேலம் அருகே அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த  கும்பல் ஒன்று,முன்விரோதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல ரவுடியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை காவல்துறை கைது செய்தனர்.  

சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் ரகுநாதன். வயது 22. பிரபல ரவுடியான இவர்  பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி   மாரிகவுண்டனும் நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 2019ல் ரகுநாதன் தொட்டில்பட்டியில் உள்ள வேறு ஒரு கேங்கில் சேர்ந்துள்ளார். இதனால், ரகுநாதனுக்கும் மாரிகவுண்டனும்   முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

சேலம்

நேற்று முன்தினம், வெள்ளையன் தனது கூட்டாளிகளுடன் ரகுநாதனின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு   ரகுநாதனை  சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த ரகுநாதன் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

இதனை அறிந்துக் கொண்ட வெள்ளையன், தனது கூட்டாளிகளான மூர்த்தி, பிரகாஷ்  ஆகியோருடன் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரகுநாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த செவிலியர்கள்  மற்றும் மருத்துவ பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த போலீசார் தப்ப முயன்ற வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

ஓட, ஓட வெட்டி கொலை

இதில், போலீசார் துரத்தி சென்ற போது வெள்ளையன், மூர்த்தி ஆகியோருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில்  ரவுடியை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி   அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகத்தில் சமீல காலமாக அரிவாள் கலாச்சரம் தலை தூக்கி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை ஒழிக்க போலீசாரும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web