பகீர் சிசிடிவி புட்டேஜ்!! மனைவியை ஓடும் ரயில் முன் தள்ளி படுகொலை செய்த கணவன்!!

 
ரயில் முன் கொலை


மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசை ரோடு ரயில் நிலையத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதில், வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மனைவியை தரதரவென இழுத்து தள்ளியிருப்பது பதிவாகியிருக்கிறது.

பகீர்

சிசிடிவி காட்சியின் படி இந்த கோர சம்பவம் நேற்று (ஆக. 22) அதிகாலை 4.10 மணிக்கு நடந்தது உள்ளதாக பதிவாகியிருக்கிறது. சுமார் 30 வயதை மதிக்கத்தக்க அந்த நபர், ரயில் நிலையத்தின் 5வது நடைமேடையில் தனது 2 குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பி அவரை தரதரவென இழுத்துச் சென்று அவாத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பாதையில் தள்ளிவிட்டுள்ளார்.


இதில், அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்திருக்கிறார் என உதவி ரயில்வே போலிஸ் கமிஷ்னர் பஜிராவ் மஹாஜன் தெரிவித்துள்ளார். மனைவியை ரயில் வரும் பாதையில் தள்ளி கொன்ற கையோடு, நடைமேடையில் தூங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு  தப்பியோடியிருக்கிறார்.


அந்த நபர் தாடர் மற்றும் கல்யாண் ஆகிய ரயில் நிலையங்களில் தென்பட்டதாகவும் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும், கொலை நடக்கும் முந்தைய நாள் இரவு கணவன் மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு தான் இதற்கு காரணமாக இருக்கிறது எனவும் கூறப்பட்டிருக்கிறது. மனைவியை கொன்ற அந்த கணவர் மீது 302 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web