பகீர்.. நடுரோட்டில் பெண்களை சரமாரியாக தாக்கிய போலீசார்! வைரலாகும் வீடியோ!

 
போலீஸ்

உத்தரபிரதேசத்தில், நடுரோட்டில் பெண்கள் மீது சராமாரியாக போலீசார் தாக்குதல் நிகழ்த்தியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் பெண்கள் மீது திடீரென போலீசார் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள். இந்த கொடூர காட்சி வலைதளங்களில் பரவி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் ஜலால்பூர் பகுதியில் நீண்ட காலமாக அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. இன்று அப்பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலை மர்ம நபர்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.


இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை கைவிடும் படி கேட்டுக் கொண்டனர். ஆனால் பொது மக்கள் எதையும்  காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதன் காரணமாக பொது மக்களுக்கும், போலீசாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது பின்னர் கைகலப்பாக மாறியதால் போலீசார் மீது கற்கலை வீசி பொது மக்கள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசாரும் லத்தி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது அங்கிருந்த பெண்கள் மீதும் போலீசார் லத்தியால் அடித்து உதைத்த சம்பவம் அரங்கேறி போர்க்களமாக காட்சியளித்தது.

போலீஸ்

ஒரு பெண்ணை போலீசார் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கிய போது அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழும் காட்சிகளும், போராட்டக்காரர்களும் கற்கலை கொண்டு தாக்குதல் நடத்திய காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வைரலாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போலீஸ்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web