பகீர்!!176 பயணிகளுடன் துபாய் செல்ல இருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு!! விமான நிலையத்தில் பரபரப்பு!!

 
ஏர் இந்தியா

துபாய் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென்று எந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்ததால் 175 பயணிகள் உயிர் தப்பிய சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 169 பயணிகளுடன் துபாய்க்கு செல்ல விமானம் புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் சோதனைகளை முடித்துக் கொண்டு விமானத்தில் ஏற தயாராக இருந்த நிலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம்
தலைமை விமானி, பயணிகள் விமானத்திற்கு ஏறுவதற்கு முன்னதாக அதன் எந்திரங்களை சரி பார்த்தார். அபோது விமானத்தில் பெரிய கோளாறு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். விமானத்தை இயக்கினால் பெரும் விபத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்தார். உடனடியாக விமான பயணம் சிறிது நேரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அடைத்தொடர்ந்து விமான என்ஜினீயர்கள் குழுவினர் விரைந்து வந்து கோளாறுகளை சரிபார்த்தனர். ஆனால் பலனளிக்காமல் போனதால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

விமான நிலையம்
இதற்கு பதில் அளித்த ஊழியர்கள் கோளாறு காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பழுது சரி பார்க்கப்பட்ட பின்னர்  விமானம் துபாய் புறப்பட்டு செல்லும் என்றும் அறிவித்தனர். உரிய நேரத்தில் தலைமை விமானி, விமானத்தில் இருந்த கோளாறை கண்டுபிடித்தார். இதனால் பயணிகள், ஊழியர்கள், விமானிகள் என அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web