பகீர் வீடியோ!! ஓடும் ரயிலில் கீழே காலை தேய்த்துக் கொண்டே செல்லும் பள்ளி மாணவி!!
சென்னை மின்சார ரயிலில் அரசு பள்ளி மாணவி ஒருவர் மிக ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி சென்ற மின்சார ரயிலில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் ஓடி வந்து ஏறுகின்றனர்.
அப்போது அரசு பள்ளி மாணவி ஒருவர், ஏறி படிக்கட்டின் அருகில் நின்று கொண்டார். ரயில் வேகமாக செல்லத் துவங்கிய போது, நடைமேடை முடியும் வரை காலை தரையில் தேய்த்தவாறு அசட்டு தைரியத்துடன் பயணித்தார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் இந்த காட்சிகளை எடுத்து பதிவிட்டுள்ளார்.
கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்குப் போட்டியாக பள்ளி மாணவி ஒருவரின் ஆபத்தான முறையில் பயணம் இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஆபத்தான முறையில் பயணம் செய்பவர்கள் மீது ரயில்வே காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?