பகீர் வீடியோ!! கார் மீது லாரி மோதி 500மீ டிரக்கை இழுத்த கொடூரம்!!

 
லாரி

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவரின் கார் மீது லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 500 மீட்டர் தூரம் வரை கார் இழுத்துச் செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரபிரதேச மாநிலம், சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக பதவி வகிப்பவர் தேவேந்திர சிங் யாதவ். நேற்று இரவு இவர் கட்சி அலுவலகத்தில் புறப்பட்டு தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று அவரது கார் மீது கண்டெய்னர் லாரி ஒன்று பலமாக மோதியது. இதில் கார் நிலைகுலைந்து போனது.கண்டெய்னர் லாரியிடம் சிக்கிய கார் சுமார் 500 மீட்டர் வரை தரதரவென இழுத்து செல்லப்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விபத்துக்குள்ளான காரில் சிக்கி இருந்த தேவேந்திர சிங்கை மிகவும் சிரமப்பட்டு மீட்டனர். 


விபத்து குறித்து தகவல் அறிந்த மெயின்புரி எஸ்.பி. தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வழக்குப்பதிவு செய்த பின்னர் மெயின்புரி எஸ்.பி. கூறும்போது, ‘‘சமாஜ்வாதி கட்சி தலைவரின் கார் மீது கண்டெய்னர் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோதிய வேகத்தில் கார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டது. கண்டெய்னர் லாரியை ஓட்டிய இட்டா பகுதியை சேர்ந்த டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று கூறினார்.
இரவு நேரத்தில் சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவரான தேவேந்திர சிங் யாதவ் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web