பகீர் வீடியோ!! இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூரத் தாக்குதல்!!

 
இளம்பெண்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜஹாபுவா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனை பிரிந்து அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் 8 மாதம் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த பெண் முகேஷை பிரிந்து மீண்டும் தனது கணவர் வீட்டிற்கே வந்து அவருடன் வாழத் தொடங்கியுள்ளார். 

இந்நிலையில், பெண் பிரிந்து சென்ற ஆத்திரத்தில் முகேஷ் தனது கூட்டாளிகள் ஐந்து பேருடன் அந்த பெண் வசிக்கும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து உள்ளனர். அந்த பெண்ணை கணவர் மற்றும் உறவினர் கண் முன்னே கட்டாயமாக வெளியே இழுத்து வந்து சாலையில் வைத்து கொடூரமாக தாக்கி ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். 
இதைக் கண்ட பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தடுக்க முயற்சித்த நிலையில் அவர்கள் மீதும் அந்நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அக்கம் பக்கத்தினர் இச்சம்பவத்தை பார்த்தும் வீடியோ எடுத்த நிலையில், இந்த தாக்குதலை தடுக்க யாரும் முன்வரவில்லை. தாக்குதல் நடத்திய முகேஷும், அந்த பெண்ணும் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியின் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் திவாரி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மீதமுள்ள இருவரை  தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web