பகீர் வீடியோ!! சாலையின் நடுவில் அமர்ந்து மது அருந்திய பிரபலம்!!

 
பாபி கட்டோரியா

உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சிலர் பல சர்ச்சைகளில் மாட்டிக் கொள்கின்றனர். அதன் மூலம் இன்னும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் செய்யும் செயல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி விடுகிறது. லைக் மற்றும் ஷேருக்காக சிலர் அநாகரீக செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.

உத்தராகண்ட மாநிலத்தில் பாபி கட்டாரியா என்பவர் இன்ஸ்டாகிராமில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாக இருந்து வருகிறார். இதனால் பல சர்ச்சைகளை கிளப்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு விடியோவை பதிவு செய்துள்ளார். அதில், ‘‘டேராடூனில் நடுரோட்டில் பாபி நாற்காலி போட்டு ஒய்யாரமாக அமர்ந்து இருக்கிறார். மேலும் கையில் இருக்கும் மது பாட்டிலில் இருந்து கிளாசில் மது ஊற்றி சுவைப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மற்றும் நடுரோட்டில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி இன்ஸ்டாகிராம் பாபியை அதிரடியாக கைது செய்துள்ளனர். எப்போதும் போல இவரது வீடியோ சர்ச்சையில் சிக்கியது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று நெட்டீசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். நம் நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை என்று வடிவேல் வர்ஷனில் சொல்லிக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web