உஷார்!! தவறு செய்யும் மாணவர்களுக்கு டிசி?! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

 
மாணவர்கள்

தமிழகத்தில் 2022-23ம் ஆண்டுக்கான நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப் பட்டுள்ளன. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் பள்ளிகளில் கொரோனா தடுப்பு முறைகளை கடைப்பிடிக்கவும், முகக்கவசம், சமூக இடைவெளி இவைகளை மாணவர்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் கடுமையாக தண்டிக்க கூடாது எனவும் தெரிவித்தது. அது முதலே பள்ளி வளாகத்தில் பல்வேறு தவறுகளை செய்யும் போக்கு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  

மாணவர்கள்

அவ்வகையில் சக மாணவர்களுடன் சண்டையிடுவது, ஆசிரியருடன் மோதல் மற்றும் சக மாணவியிடம் பாலியல் தொல்லை , வகுப்பறையில் போதைப்பொருட்களை பயன்படுத்துவது மற்றும் சிகரெட் புகைப்பது என மாணவர்கள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  மாணவர்களுக்கு ஈடாக பள்ளி மாணவிகளும் வகுப்பறைக்கு உள்ளேயே மது அருந்தும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவ மாணவிகள் இது போன்ற அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பள்ளி கல்வித்துறை  அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெஞ்ச், டேபிள், வகுப்பறை ஜன்னல் மற்றும் ஆய்வக கருவிகள் உட்பட பள்ளியின் சொத்துக்களுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் அதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரே முழு பொறுப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள்

அத்துடன்  பள்ளியில் ஒழுக்கக்கேடாக, தவறிழைக்கும் போக்கில் நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஆசிரியர் தக்க ஆலோசனை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மேலும் ஆசிரியர்களின் ஆலோசனையை மீறி தவறு செய்யும் மாணவர்களின் டிசியை கொடுக்கவும், அவர்களை  வேறு பள்ளியில் மாற்றவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு அடங்கிய சுற்றறிக்கை பள்ளி கல்வி மற்றும் தனியார் பள்ளிகளின் இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை விரைவில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என  அரசு தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web