உஷார்!! அடுத்த 4 நாட்களுக்கு இந்த 9 மாவட்டங்களில் கனமழை !!

 
தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! மிக கன மழை எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9-ஆம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் நல்ல மழைப்பொழிவை பெற்று நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.  

மழை

இதன் தொடர்ச்சியாக குமரி கடல் பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மிதமானது வரை கனமானது வரை மழை பெய்யலாம்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் நவம்பர் 9ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது இதனால் அடுத்த 2  நாட்களில் அதாவது 48 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் தமிழகம்,  புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5 மாவட்டங்களில் கன மழை
இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர்  14ம் தேதி வரை கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  அடுத்த 4 நாட்களுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web