உஷார்! உயிரைப் பறித்த விளையாட்டு! 2 வயது குழந்தை பலி!

 
ஷாலினி

பெற்றோர்களே.. வளர்ந்த பின்னர் மட்டுமல்ல... சிறு குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதிலும் ரொம்பவே எச்சரிக்கையாக இருங்க. தவமிருந்து பெற்ற பெண் குழந்தை, 2 வயதில் மரணமடைந்ததை எப்படி அந்த பெற்றோர்கள் தாங்கிக் கொள்வார்கள்.. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் சத்யராஜ். வெல்டிங் வேலை செய்து வரும் இவருக்கு ஷாலினி (2) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வாசலில் இருந்த மழை நீர் தேங்கியுள்ள தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்து விட்டது. 

செங்கல்பட்டு

சிறிது நேரம் கழித்து, குழந்தையைக் காணவில்லை என்று தேடியவர்கள், தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக, குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஷாலினியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், உயிரிழந்த குழந்தை ஷாலினியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

குழந்தை உயிரிழப்பு

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web