உஷார்! இன்ஸ்டாவுல அறிமுகம்.. லாட்ஜூல பலாத்காரம்! கதறியழுத ப்ளஸ் ஒன் மாணவி!

 
செக்ஸ் பாலியல் க்ரைம் ஆபாசம் கற்பழிப்பு

சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது என்று அங்கலாய்கிறோம். ஆனால், கூட்டு குடும்பங்கள் சிதைந்து போனதை நமக்கு வசதியாய் மறந்து போகிறோம். தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கும் பெரும்பாலான வீடுகளில், மகளோ, மகனோ யாருடன் பழகுகிறார்கள், எங்கு சாப்பிடுகிறார்கள் என்கிற எந்த விவரமும் பெற்றோர்களுக்கு தெரிவதில்லை.

பெரும்பாலான பாலியல் குற்றங்களில் பெற்றோர்களே முதல் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். உங்கள் மகனையோ, மகளையோ பாதுகாப்பாகவும், ஒழுக்கத்துடனும் ஆளாக்குங்கல். என் மகன் பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று நம்பிக் கொண்டிருக்காதீர்கள். ஏறெடுத்துப் பார்க்கவில்லை என்றாலும் பிரச்சனை தான். அந்தந்த வயதுக்கான ஹார்மோன்கள் சுரப்பதைத் தடுக்க முடியாது. வரம்பு மீறாமல் இருக்க கற்று தாருங்கள்.

சக தோழியாக, ஆரோக்கியமான நட்பை கற்று தாருங்கள். இன்ஸ்டாகிராம் மூலம் தினேஷ் என்பவர் நாகர்கோவிலைச் சேர்ந்த 17 வயது மாணவியிடம் பழகி வந்துள்ளார். அப்போது மாணவியை நேரில் சந்திக்கும்படி தினேஷ் கேட்டான். மேலும் அந்த இளைஞர் கன்னியாகுமரிக்கு வருவதாகவும் கூறினார். மாணவியை அங்கு வரும் படி அழைத்தாள். உடனே மாணவி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி தினேஷை சந்திக்க சென்றுள்ளார்.

கன்னியாகுமரி சென்றதும் மாணவி செல்போன் மூலம் தினேஷை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி  இருப்பதாக கூறினார். உடனே அந்த மாணவியும் அந்த விடுதிக்கு சென்றார். இருவரும் அங்கு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பாலியல் வன்கொடுமை

அப்போது தினேஷ் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு, தினேஷ் சில நாட்களுக்கு மாணவியுடனான தொடர்பை தவிர்த்துள்ளான். இதனால் மனமுடைந்த மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியதால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக கன்னியாகுமரி மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் தினேஷை பிடிக்க முடிவு செய்த போலீசார், மாணவியை செல்போன் மூலம் தினேஷை தொடர்பு கொண்டு பேசுமாறு கூறியுள்ளனர். அதன்படி, அந்த மாணவியும் தினேஷை தொடர்பு கொண்டு மீண்டும் கன்னியாகுமரிக்கு வருமாறு தினேஷை அழைத்துள்ளார். முதலில் மறுத்த தினேஷ், இறுதியாக கன்னியாகுமரிக்கு வர சம்மதித்தார்.

பாலியல் வன்கொடுமை

அதன் பிறகு அந்த இளைஞர் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் தினேஷை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web