உஷார் மக்களே!! மீண்டும் மிரட்ட காத்திருக்கும் புதிய புயல்!!

 
புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

மாண்டஸ் புயல் நேற்று சூறாவளி காற்றுடன் கரையை கடந்து சென்ற நிலையில் மீண்டும் புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மீண்டும் வரும் 13-ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல்

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாகவும்,   மேலடுக்கு சுழற்சி டிசம்பர், 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் மாண்டஸ் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த நிலையில் வேலூருக்கு 30 கி.மீ. தொலைவில் 9 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

அசானி புயல்

இது கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 120 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

From around the web