நாளை கிருஷ்ண ஜெயந்தி வழிபட உகந்த நேரம், முறை, பலன்கள்!!

 
கோகுலாஷ்டமி

விஷ்ணு அவதாரங்களில் அநேக அற்புதங்கள் நிறைந்த அவதாரம் கிருஷ்ண அவதாரம். கிருஷ்ணனின் லீலைகளில் கோபியர்கள் மட்டுமல்ல கேட்பவர், பார்ப்பவர் எவர் மனதையும் கொள்ளை கொள்வார். கம்சனை வதம் செய்து சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்தார். கிருஷ்ணன்  ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.  ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி , கோகுலாஷ்டமி எனக் கொண்டாடுவர்.  

கோகுலாஷ்டமி

நள்ளிரவில் சிறையில் அவதரித்த கண்ணனின் பிறந்ததினம் கோகுலாஷ்டமியாக அனுசரிக்கிறோம். அந்த வகையில் நடப்பாண்டில் நாளை ஆகஸ்ட் 18 மற்றும் 19 ம் தேதி நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். கிருஷ்ணரை கண்ணா,முகுந்தா என பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணை  இமை காப்பது போல் கிருஷ்ணன் நம்மை காப்பான்   என்பது ஆன்றோர் மொழி.  முகுந்தா என்றால்  முக்தி அளிப்பவன் எனப் பொருள். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில்  கிருஷ்ணரை  நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் சிறப்பு அம்சம்.  கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய தினமான இன்றே  வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும்.  

வாசலில் தொடங்கி பூஜையறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிப்பதை வழக்கமாக வைத்திருப்பர். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம். நாளை பூஜை செய்ய நல்ல நேரம் ஜென்மாஷ்டமி திருக்கணித பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 18ம் தேதி வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி  நாளை மறுநாள் ஆகஸ்ட் 19ம் தேதி வெள்ளிக்கிழமையும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவதரித்ததாக அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 19ம் தேதி நள்ளிரவு 1.48 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 20ம் நள்ளிரவு 2.47 மணி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. பூஜை செய்ய நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை .  பிற்பகல் 12.15 மணி முதல் 1.15 மணி வரை . அதே போல்  மாலை 05.10 மணி முதல் இரவு 06.10 மணி வரை அல்லது இரவு 08.10 மணி முதல் 09.10 மணி வரையும் பூஜைக்கு உகந்த நேரம்.  கண்ணனை அழைக்க வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் அரிசி மாவில் குட்டிக்குட்டி பாதங்கள் வரைய  வேண்டும். வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதியச் செய்ய வேண்டும்.

கோகுலாஷ்டமி

கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முறுக்கு, லட்டு இவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால் பூஜையை மாலையில் செய்வது கூடுதல் சிறப்பு குழந்தைகளுக்கு கண்ணன் ராதை வேடம் போட்டு அக்கம் , பக்கத்து  சிறுவர் சிறுமிகளை பூஜைக்கு அழைத்து அவர்களுக்கு கண்ணனின் லீலைகளை சொல்லும் கதைகளை கூறினால்  அவரின் அனுக்கிரகம் பெறலாம். கிருஷ்ண ஜெயந்தி நாளில் கண்ணனை வழிபட குட்டிக் கிருஷ்ணன் வீட்டில் பிறப்பான் என்பது ஐதிகம்.  மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும். இளைஞர்களுக்கு அரசியல் ஞானம் உண்டாகும், நிர்வாக திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும், திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும், குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும். கண்ணணை வீட்டிற்கு அழைப்போம். இல்லங்களில் அமைதியையும், இன்பத்தையும் கொண்டு வருவோம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web