நொடிப்பொழுது அஜாக்கிரதை! தூக்கி வீசப்பட்ட பைக்! சம்பவ இடத்திலேயே என்ஜினீயர் பலி!

 
விமல்

நொடிப்பொழுது அஜாக்கிரதையினால், பெயர் பலகையில் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இளைஞர்களே வாகனங்களில் செல்லும் போது ரொம்பவே கவனமா இருங்க. ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஜம்பை பகுதியில் வசித்து வந்தவர் விமல் (19). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாட விமல் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். 

 குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜம்பை அருகே உள்ள வைரமங்கலத்தில் வசிக்கும் தன் நண்பர் பிரவீன் என்பவரை பார்ப்பதற்காக விமல் இருசக்கர வாகனத்தில் சென்றார்.  நண்பரை சந்தித்த பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். தளவாய்பேட்டை - ஜம்பை சாலையில் கோம்புக்காடு பள்ளம் அருகே வந்த போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதில் சாலையோரம் இருந்த பெயர் பலகையில் பயங்கரமாக மோதியது. 

ஈரோடு
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட விமல், தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

 

From around the web