பிறந்தநாள் கொண்டாட்டம்! காதலியின் மண்டையை உடைத்த முன்னாள் காதலன்!

 
தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

தன்னுடனான காதலை முறித்துக் கொண்டு, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த காதலியின் மண்டையை அடித்து உடைத்திருக்கிறார் முன்னாள் காதலன். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கல்லுக் கூட்டத்தை சேர்ந்தவர் ஜாண் ஜெரோஷ். இவர் குளச்சல் அருகே ஒரு கிராமத்தில் பாஸ்டராக உள்ளார். இவரது மகள் ஜாபியா ஜாஸ்மின் (19), கருங்கல் அருகே ஒரு தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். 

இந்நிலைநில் நேற்று முன்தினம் இரவு ஜாபியா ஜாஸ்மின் தனது பிறந்தநாளை கொண்டாட 2 தோழிகள் மற்றும் நண்பர் ஒருவரையும் வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டு மொட்டை மாடியில் அவர்கள் பிறந்தநாள் விழா கொண்டாட தயாராகி கொண்டிருந்தனர். அப்போது ஜாபியா ஜாஸ்மினின் பள்ளி தோழன் சுங்கான் கடை பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவர் அவரது வீட்டிற்கு வந்து புளியமரம் வழியாக மொட்டை மாடிக்கு சென்றார். 

25 போலீஸ்… 10 பாதுகாப்பு வாகனங்கள்… ஒரு கை பார்த்த இளம்பெண்..!

இவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்ததும், அஜின் தகாத வார்த்தைகள் பேசி, கட்டையால் மாணவியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ஜாபியா ஜாஸ்மின், உடையார் விளையில்  உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் போலீசார் அஜின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

க்ரைம்

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவி ஜாபியா ஜாஸ்மினும், அஜினும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவி ஜாபியா காதலை முறித்து கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜின், மாணவியின் பிறந்தநாள் அன்று வீட்டிற்கு வந்து கட்டையால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

வாலிபர் ஒருவர் இரவில் மொட்டை மாடிக்கு ஏறி சென்று கல்லூரி மாணவி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web