விபரீதத்தில் முடிந்த பிறந்த நாள்!! கொண்டாட்டத்தில் நண்பர் குத்திக் கொலை!!

 
குணசேவியர்

 

திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில் காய்கறி மற்றும் மர விற்பனை செய்து வந்தவர் வியாபாரி அருள் குணசேவியர் (வயது 34). திருமணமான இவருக்கு லிதியாமேரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் அருள் குணசேவியர் தனது 5க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் ஈடுபட்டார். அவர்கள் அனைவரும் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அப்போது திடீரென்று வியாபாரி அருள் குணசேவியருக்கும், அவரின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்களில் ஒருவர் கிடுகிடுவென ஓடிச் சென்று நின்று கொண்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில் இருந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தார்.

கொலை
கண் இமைக்கும் நேரத்தில் அவர் அருள் குணசேவியரின் மார்பு, தொடை பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.  இதில் குணசேவியர் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனால் பதறிப் போன அக்கம பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் துரதிருஷ்டவசமாக அருள் குணசேவியர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தலைமயிலான போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார். வியாபாரி அருள் குணசேவியரை கொலை செய்ய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

உடல்

அதன்படி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமயிலான போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதியில், அருள் குணசேவியரை கத்தியால் குத்தி கொலை செய்தது  வேடப்பட்டி இந்திராநகரை சேர்ந்த குட்டித்தம்பி என்ற பரமசிவம் (30) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். அருள் குணசேவியர் கொலை தொடர்பாக மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.வியாபாரியின் திடீர் மறைவால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டம் கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web