பாலிவுட் நடிகை கோவிலுக்குள் செல்ல கருப்புக் கொடி!! போலீஸ் தடியடி!! பதற்றநிலை!!

 
ரன்பீர்கபூர் ஆலியாபட்

பிரபல பாலிவுட் நடிகர்  ரன்பீர் கபூரும்  அவரது மனைவியும் நடிகையுமான அலியா பட் பிரம்மாஸ்திரா திரைப்பட இயக்குனர் அயன் முகர்ஜியும் ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் ரன்பீர் கபூர், அலியா பட் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரா படம் நாளை திரைக்கு வருகிறது.இதில் கர்ப்பிணியான அலியா பட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஹலோ  உஜ்ஜயினி மகாகாலேஷ்வர் கோயிலுக்கு செல்கிறோம்’ எனப் பதிவிட்டுள்ளனர். 

ரன்பீர் கபூர், ஆலியா பட்


இதில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலர் உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயில் வளாகத்தில் குவிந்துள்ளனர். இந்த கோவில்  நுழைவு வாயிலில் கருப்புக் கொடியை கையில் வைத்துக் கொண்டு கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் திடீரென பதற்றம் தொற்றிக் கொண்டது. பதற்றத்தை தணிக்க போலீசார் தடியடி நடத்தினர். தகவல் அறிந்ததும்  அலியா பட், ரன்பீர் கபூர், தயாரிப்பாளர் அயன் முகர்ஜியுடன் உஜ்ஜையனி மகாகாலேஷ்வர் கோவிலின் உள்ளே செல்லாமல், இந்தூர் திரும்பியுள்ளனர். அதன்பிறகு இந்தூரில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் சென்றனர்.

போலீஸ்
இதுகுறித்து உஜ்ஜயினி கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மகாகாலேஷ்வர் கோயில் வளாகத்தில் நிலைமை கட்டுக்குள் வந்த பின்னர், அயன் முகர்ஜி மட்டும் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்து அமைப்பினரின் செய்திக்குறிப்பில் ‘சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த ரன்பீர் கபூர், மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு கிடையாது என தெரிவித்துள்ளார். அவருடைய மனைவி அலியா பட், இந்துக்களுக்கு எதிரானவர். அதனால் தான் தம்பதியை தடுத்தோம்’ என பதிவிட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web