அகதிகள் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து: 77 பேர் பலி!!

 
சிரியா  படகு விபத்து

உலக நாடுகளில் பலவற்றில் கடும் பெருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் அங்கு கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் அங்கு வாழ வழியின்றி பொதுமக்கள் தங்கள் நாடுகளை விட்டு அகதிகளாக மற்ற  நாடுகளுக்கு  செல்கின்றனர்.  இந்நிலையில் லெபனான் நாட்டில் பவுண்ட் மதிப்பு 90%க்கும் கீழ் குறைந்ததால்  பல்லாயிரக்கணக்கானோர்  வேலை  இழந்துள்ளனர்.   இதனால் வறுமையில்  வாடும்  ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடும் வாழ்வாதார போராட்டங்களை சந்தித்து வருகின்றன.

அந்த  நாட்டின் மக்கள் தொகையில்  80 சதவீதத்தினர்  உணவு  மற்றும்  மருந்துப்  பொருட்கள்  வாங்க  முடியாமல் சிரமத்திற்கு  ஆளாகியுள்ளனர். இதனால் அண்டை நாடுகளில்  அவர்கள்  தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

 இந்நிலையில் லெபனானில் இருந்து சிரியாவிற்கு அகதிகலாக  ஏராளமானோர்  படையெடுத்து வருகின்றனர்.  அதில் தற்போது 100கும் மேற்பட்ட அகதிகளுடன்  புறப்பட்ட படகு  ஒன்று  சிரியாவின்  கடற்கரை  நகரமான டார்டவுஸ்  அருகே  சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது.

அப்போது  அந்த படகில் சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்தவர்கள்  இருந்ததாக  கூறப்படுகிறது. பின்னர் இது  குறித்து தகவலறிந்த  உடன்  சிரியா  கடலோர  காவல் படையினர்  உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.  அங்கு  அவர்கள்  தீவிர  மீட்பு  பணியில்  இறங்கினர்எனினும் இந்த விபத்தில்  பெண்கள்,  சிறுவர்கள்  உள்பட  77 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய  அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.   20  பேர்   படுகாயங்களுடன்  மீட்கப்பட்டுள்ளதாகவும்அவர்கள்   மருத்துவமனைகளில்   அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை   பெற்று   வருவதாகவும்  சிரியா  அரசு தெரிவித்துள்ளது.

From around the web