கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து விபத்து: 19 மீனவர்கள் மீட்பு!!

 
தத்தளித்த மீனவர்கள் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கில்பர்ட். இவருக்கு சொந்தமாக உள்ள 'விண்ணேற்பு மாதா' என்ற விசைப்படகில் கடந்த 22-ம் தேதி முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து  மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஓட்டுனர் மதன் தலைமையில் குமரி மாவட்ட மீனவர்கள் 12 பேர் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் என மொத்தம் 19 பேர் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற  விசைப் படகானது 40 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

 அப்போது அதிகாலை கடலில்  அலை அதிகமாக இருந்ததால்  படகு அலையில் சிக்கி சேதமடைந்துள்ளது. சேதமடைந்த படகு மெல்ல மெல்ல கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளது. இதனை கண்டு  விசைப்படகில் இருந்த 19 மீனவர்களும் செய்வதாறியாது தவித்துகொண்டிருந்துள்ளனர்.  அப்போது  அந்த வழியாகச் சென்ற 'நிகாஷ்' என்ற விசைப்படகில் இருந்த மீனவர்கள்'விண்ணேற்பு மாதா' விசைப்படகு   கடலில் மூழ்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக  அருகில் சென்ற மீணவர்கள் விசைப்படகில் தத்தளித்துகொண்டிருந்த  மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் இது குறித்து குளச்சல் கடல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த   மீட்புபடையினர்  தங்கள் படகு மூலம் முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்குக் அழைத்து வந்தனர்.  மீட்கப்பட்ட 19 மீனவர்களும் மாலை கரை திரும்பிய நிலையில் விபத்து குறித்து மீனவர்களிடம் குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web